மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் 2 பேர் பலி


மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் 2 பேர் பலி
x

படப்பை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் 2 பேர் பலியானார்கள்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த மணிமங்கலம் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர்கள் ஆறுமுகம் (வயது 40), குமார் (44). கூலித்தொழிலாளிகள். இவர்கள் இருவரும் நேற்று வண்டலூர் வாலாஜாபாத் சாலையில் படப்பை அடுத்த சாலமங்கலம் கூட்டு சாலை அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒரகடம் பகுதியில் இருந்து படப்பை நோக்கி வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணிமங்கலம் போலீசார் விசாரணை செய்து இறந்த இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்து சம்பவத்தால் படப்பை வண்டலூர் வாலாஜாபாத் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story