சென்னை அணிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

ஐ.பி.எல். போட்டியில் 4-வது முறையாக கோப்பையை வென்றுள்ள சென்னை அணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
சென்னை,
14வது சீசன் ஐ.பி.எல். தொடரின் இறுதி போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 4-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.
இந்த நிலையில் வெற்றி பெற்றுள்ள சென்னை அணிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், சென்னை அணியிடம் இருந்து அருமையான ஆட்டம் வெளிப்பட்டது. 4-வது முறையாக ஐ.பி.எல் கோப்பையை வென்றுள்ள சிஎஸ்கே அணியில் உள்ள ஒவ்வொரு வீரருக்கும் உலகெங்கிலும் இருக்கிற ஒவ்வொரு ரசிகர்களுக்கும் வாழ்த்துக்கள்.
இந்த வெற்றியை கொண்டாட சென்னை, தோனிக்காக அன்புடன் காத்திருக்கிறது. இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.
Fantabulous performance from @ChennaiIPL!
— M.K.Stalin (@mkstalin) October 15, 2021
The kings have roared back.
Congratulations to each and every #CSK player and fans across the globe on winning the #IPL trophy for the fourth time.
Chennai is waiting #AnbuDEN for @msdhoni to celebrate this victory! #Yellove#IPLFinalpic.twitter.com/N3V8khxrMO
Related Tags :
Next Story