சென்னையில் இந்த ஆண்டு மட்டும் குண்டர் சட்டத்தில் 245 பேர் கைது - நன்னடத்தை உறுதிமொழியை மீறிய 14 பேர் சிறையில் அடைப்பு


சென்னையில் இந்த ஆண்டு மட்டும் குண்டர் சட்டத்தில் 245 பேர் கைது - நன்னடத்தை உறுதிமொழியை மீறிய 14 பேர் சிறையில் அடைப்பு
x

சென்னையில் இந்த ஆண்டு மட்டும் குண்டர் சட்டத்தில் 245 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், நன்னடத்தை உறுதிமொழியை மீறிய 14 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சென்னை

சென்னையில், கடந்த ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் இந்த மாதம் 12-ந் தேதி வரை, கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக 150 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பண மோசடியில் ஈடுபட்ட 60 பேரும், கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை செய்த 25 பேரும், பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய 4 பேரும், பெண்களை மானபங்கம் செய்த 2 பேரும், சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 3 பேரும், உணவு பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய ஒருவரும் என மொத்தம் 245 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

மேலும், நன்னடத்தை பிரமாண பத்திர உறுதிமொழியை மீறி மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 14 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story