சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு விமானத்தில் கடத்த முயன்ற ரூ.3¼ கோடி வெளிநாட்டு பணம் பறிமுதல்


சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு விமானத்தில் கடத்த முயன்ற ரூ.3¼ கோடி வெளிநாட்டு பணம் பறிமுதல்
x

சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு விமானத்தில் கடத்த முயன்ற ரூ.3 கோடியே 37 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் விமானத்தில் செல்ல வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சென்னையை சேர்ந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

அதிகாரிகளிடம் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதனால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது துணிகளுக்கு நடுவே கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர், சவுதி ரியால் ஆகியவற்றை மறைத்து வைத்து இருப்பதை கண்டுபிடித்தனர்.

பின்னர் அவரை தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் அவர் உள்ளாடைகளுக்குள்ளும் வெளிநாட்டு பணத்தை மறைத்து வைத்து கடத்த முயன்றது தெரிந்தது.

அவரிடம் இருந்து 2,835 அமெரிக்க டாலர்கள், 1000 சவுதி ரியால்கள் என மொத்தம் ரூ.3 கோடியே 37 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக சென்னை வாலிபரை கைது செய்து அவர் யாருக்காக அந்த பணத்தை சிங்கப்பூருக்கு கடத்திச்செல்ல முயன்றார்? அது ஹவாலா பணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story