தி.மு.க.-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே நாளை 3-ம் கட்ட பேச்சுவார்த்தை


தி.மு.க.-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே நாளை 3-ம் கட்ட பேச்சுவார்த்தை
x

நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் முன்னரே, தி.மு.க. தங்களது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை இறுதி செய்வதில் முனைப்பு காட்டி வருகிறது.

கூட்டணி கட்சிகளுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்த நிலையில், கடந்த 24-ம் தேதி 2-வது கட்ட பேச்சுவார்த்தையை தி.மு.க. தொடங்கியது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய 2 கட்சிகளுடன் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சுமுக உடன்பாடு ஏற்பட்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்பாக தி.மு.க. - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே 2-ம் கட்ட பேச்சுவார்த்தை கடந்த 25-ம் தேதி நடைபெற்றது. இதில் சுமுக உடன்பாடு ஏற்படவில்லை.

இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலுக்கான தி.மு.க. - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையேயான தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நாளை (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதைபோல தி.மு.க. - இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கிடையே 3-ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நாளை காலை 11:30 மணிக்கு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story