லாட்டரி சீட்டு விற்பனை செய்த 5 பேர் கைது..! ரூ.75,000 மதிப்பிலான லாட்டரி சீட்டுகள் பறிமுதல்


லாட்டரி சீட்டு விற்பனை செய்த 5 பேர் கைது..! ரூ.75,000 மதிப்பிலான லாட்டரி சீட்டுகள் பறிமுதல்
x

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே, வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே, வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

அய்யலூர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மறைமுகமாக விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலை அடுத்து, போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமான 5 பேரை பிடித்து சோதனை செய்ததில், அவர்களிடம் லாட்டரி சீட்டுகள் இருப்பது தெரியவந்தது. அந்த 5 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான லாட்டரிகளை சீட்டுகள் மற்றும் 3 ஆயிரம் ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர்.


Next Story