வீட்டின் முன் நிறுத்தி இருந்த காரில் திடீர் தீ விபத்து


வீட்டின் முன் நிறுத்தி இருந்த காரில் திடீர் தீ விபத்து
x

சென்னை பெரம்பூரில் வீட்டின் முன் நிறுத்தி இருந்த காரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

சென்னை

சென்னை பெரம்பூர் சின்ன குழந்தை 2-வது தெருவை சேர்ந்தவர் அர்ஜுன் (வயது 25). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு அர்ஜுன் தனது காரை வீட்டின் முன்பு உள்ள மைதானத்தில் நிறுத்தி இருந்தார். அப்போது நள்ளிரவு கார் தீ பிடித்து எரிய ஆரம்பித்தது.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் செம்பியம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீயிச்சி அடித்து தீயை அணைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் காரில் மின்கசிவு ஏற்பட்டு தீ பற்றியது தெரியவந்தது.


Next Story