கும்மிடிப்பூண்டி அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வியாபாரி பலி


கும்மிடிப்பூண்டி அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வியாபாரி பலி
x

கும்மிடிப்பூண்டி அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வியாபாரி சம்பவ இடத்திலேயே பலியானார்.

திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டியை சேர்ந்த வியாபாரி லியாகத் அலிக்கான் (வயது 55). இவர், நேற்று காலை பெரியபாளையம் அடுத்த மஞ்சங்கரணையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மருத்துவ சிகிச்சைக்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

கும்மிடிப்பூண்டி அடுத்த வேற்காடு அருகே செல்லும்போது அதே திசையில் முன்னால் சென்று கொண்டிருந்தத லாரி திடீரென எந்த வித சைகையும் காண்பிக்காமல் இடது புறமாக திரும்பியதாக கூறப்படுகிறது. இதில் லாரியின் பக்கவாட்டில் மோட்டார் சைக்கிள் மோதியது. நிலைதடுமாறிய லியாகத் அலிக்கான் மோட்டார் சைக்கிளில் இருந்து கீேழ விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள கீழ்முதலம்பேடு கிரமத்தை சேர்ந்தவர்கள் ராஜசேகர் (வயது 18), யுகேந்திரன் (18), டேவிட் (18). இதில் யுகேந்திரன் கவரைப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். ராஜசேகர் பொன்னேரியில் உள்ள அரசு கல்லூரியில் பி.ஏ. வரலாறு முதலாம் ஆண்டு படித்து வந்தார். நண்பர்களான 3 பேரும் கடந்த 9-ந் தேதி காலை ஒரே மோட்டார் சைக்கிளில் கவரைப்பேட்டையில் இருந்து தச்சூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை டேவிட் ஓட்டி சென்றார். புதுவாயல் அருகே புதுரோடு சந்திப்பில் உள்ள சர்வீஸ் சாலையில் மோட்டார் சைக்கிள் செல்லும் போது, தொழிற்சாலை ஒன்றில் இருந்து வெளியே வந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாரத விதமாக மோதியது. இந்த விபத்தில், மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேரும் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி பள்ளி மாணவர் யுகேந்திரன் கடந்த 12- ந்தேதி உயிரிழந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் கல்லூரி மாணவர் ராஜசேகரும் உயிரிழந்தார். இந்த விபத்தில் பலி எண்ணிக்கை தற்போது 2 உயர்ந்துள்ளது.


Next Story