நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க. - தே.மு.தி.க. 2-ம் கட்ட பேச்சுவார்த்தை


நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க. - தே.மு.தி.க. 2-ம் கட்ட பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 6 March 2024 11:40 AM GMT (Updated: 6 March 2024 11:42 AM GMT)

அ.தி.மு.க. - தே.மு.தி.க. இடையிலான 2-ம் கட்ட கூட்டணிப் பேச்சுவார்த்தை சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில் நடைபெற்று வருகிறது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே அனைத்து கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன.

பல்வேறு கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. தேர்தல் கூட்டணி, தேர்தல் பரப்புரை, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் துரிதப்படுத்தியுள்ளன.

இந்த நிலையில் அ.தி.மு.க. - தே.மு.தி.க. கட்சிகளுக்கு இடையிலான 2-ம் கட்ட கூட்டணிப் பேச்சுவார்த்தை சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் அ.தி.மு.க. சார்பில் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, பெஞ்சமின் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

மேலும், தே.மு.தி.க. சார்பில் இளங்கோவன், பார்த்தசாரதி, மோகன்ராஜ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.


Next Story