ரேஷன் அரிசி கடத்த முயன்றவர் கைது


ரேஷன் அரிசி கடத்த முயன்றவர் கைது
x

திருவள்ளூர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்த முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே. பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஆனந்த வல்லிபுரம் என்ற இடத்தில் திருவள்ளூர் உணவு கடத்தல் பிரிவு அதிகாரிகள் கொண்ட குழுவினர் நேற்று மதியம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த சரக்கு ஆட்டோவை அவர்கள் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 510 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கங்காதர நெல்லூர் அருகே மணப்புரம் கிராமத்தைச் சேர்ந்த குலாம் அப்பாஸ் (வயது 28) என்பவரை அவர்கள் கைது செய்தனர்.. பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை திருவள்ளூரில் உள்ள அரசு தானிய கிடங்கில் ஒப்படைத்தனர்.


Next Story