'தேர்தல் நெருங்கும் போது தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் எங்கள் பக்கம் வரலாம்' - அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்


தேர்தல் நெருங்கும் போது தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் எங்கள் பக்கம் வரலாம் - அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்
x

பல கட்சிகள் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் வந்து இணைவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

சென்னை,

சென்னை புழலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"தேர்தல் நெருங்கும் சமயத்தில் பல கட்சிகள் எங்களுடன் வந்து சேர்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. தற்போது தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அனைத்தும் அவர்களுடன் இணைந்து ஒத்துப்போகிறவர்களாக இருக்கவில்லை. ஆட்சியில் இருப்பதால் சில காலம் இணைந்து இருப்போம் என்ற மனநிலையில் இருப்பார்கள்.

எனவே தேர்தல் நெருங்கும் போது தி.மு.க. கூட்டணியில் இருந்து பல கட்சிகள் வெளியேறி அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் வந்து இணைவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது" என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.



Next Story