தமிழ்நாடு வரும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா...!


தமிழ்நாடு வரும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா...!
x

பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா வரும் 10ம் தேதி தமிழ்நாடு வர உள்ளார்.

சென்னை,

பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா வரும் 10ம் தேதி (வெள்ளிக்கிழமை) தமிழ்நாடு வர உள்ளார். கிருஷ்ணகிரி புதிய மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தை ஜேபி நட்டா திறந்து வைக்கிறார்.

இந்த வருகையின் போது வரும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு பாஜக உயர்மட்ட குழுவுடன் ஜேபி நட்டா ஆலோசனை நடத்த உள்ளார்.

நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இடம்பெற்றிருந்தது. இடைத்தேர்தலின்போது கூட்டணி தொடர்பாக அதிமுக - பாஜக இடையே சிறு சிறு மோதல்கள் நிலவி வந்தன. இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெற்றது. இடைத்தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்திருந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்களித்துவிட்டு வந்த பாஜக எம்.எல்.ஏ. சரஸ்வதி, இடைத்தேர்தலில் யார் வெற்றிபெற்றாலும் பண நாயகம் வெற்றிபெற்றதாகவே கருத்தப்படும் என்று கூறி சர்ச்சையை கிளப்பியிருந்தார்.

இந்த சூழ்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக- அதிமுகவுடன் கூட்டணி வைக்குமா? தனித்து போட்டியிடுமா? மாற்று கட்சிகளுடன் கூட்டணி வைக்குமா? என்பது குறித்து ஜேபி நட்டா தலைமையில் நடைபெறும் பாஜக உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story