திருவண்ணாமலையில் நாளை தமிழக அரசை கண்டித்து பா.ஜ.க. ஆர்ப்பாட்டம் - அண்ணாமலை அறிவிப்பு


திருவண்ணாமலையில் நாளை தமிழக அரசை கண்டித்து பா.ஜ.க. ஆர்ப்பாட்டம் - அண்ணாமலை அறிவிப்பு
x

Image Courtesy : @annamalai_k

ஆர்ப்பாட்டத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

குண்டர் சட்டத்தின் கீழ் விவசாயிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருவண்ணாமலையில் நாளை பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"திருவண்ணாமலை மாவட்டத்தில், விவசாய நிலங்களை ஆக்கிரமிக்க முயற்சித்த தி.மு.க. அரசை எதிர்த்து அமைதியான முறையில் போராட்டம் நடத்திய விவசாயிகளை, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்த தி.மு.க. அரசின் அடக்குமுறையைக் கண்டித்து, நாளைய தினம் (18/11/2023), தமிழக பா.ஜ.க. சார்பாக, தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலையில் நடைபெறும் என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறோம்."

இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


Next Story