சி.ஏ.ஏ. சட்டம் அமல்: மத்திய அரசை கண்டித்து 15-ம் தேதி வி.சி.க. சார்பில் ஆர்ப்பாட்டம்


சி.ஏ.ஏ. சட்டம் அமல்: மத்திய அரசை கண்டித்து 15-ம் தேதி வி.சி.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
x

மத்திய அரசைக் கண்டித்து 15-ம் தேதி வி.சி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.

சென்னை,

அண்டை நாடுகளில் சிறுபான்மையாக உள்ள இந்துக்கள், சீக்கியர்கள் ஆகியோருக்கு குடியுரிமை அளிக்கும் 2019 திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றி இருந்தது. விரைவில் இது நாடு முழுவதும் அமலுக்கு கொண்டுவரப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்து இருந்தது.

இந்த அறிவிப்பின் மூலமாக அண்டை நாடுகளில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்டோர் இந்தியாவிற்கு வருகை தந்தால், ஐந்து வருடங்கள் அவங்கள் இங்கு தங்கியிருந்தாலே அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த நிலையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முதல் நாடுமுழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

இந்த நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தை அமலுக்கு கொண்டு வந்த மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், "குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் மூலம் மதச் சார்பின்மையை சிதைக்கும், மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தும், இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பைத் தீவிரப்படுத்தும்; இதன்வழி அரசியல் ஆதாயம் தேடும் பாசிச மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் 15.03.2024 (வெள்ளிக்கிழமை) விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அனைத்து ஜனநாயக சக்திகளும் பங்கேற்கும் வகையில் இவ்வார்ப்பாட்டம் ஒருங்கிணைக்கப்படும்". இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Next Story