செந்தூர் எக்ஸ்பிரஸ் நெல்லையிலிருந்து இயக்கப்படும் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு


செந்தூர் எக்ஸ்பிரஸ் நெல்லையிலிருந்து இயக்கப்படும் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x

கோப்புப்படம்

நாளை பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் திருநெல்வேலி வரையில் மட்டுமே இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருச்செந்தூரில் இருந்து நாளை (22-ந்தேதி) சென்னை எழும்பூருக்கு புறப்படும் செந்தூர் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்.20606) திருச்செந்தூர்- நெல்லை இடையே பகுதியளவு ரத்து செய்யப்பட்டு, இரவு 9.35 மணிக்கு நெல்லையிலிருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் சென்றடையும்.

இதேபோல, திருச்செந்தூரில் இருந்து பாலக்காடு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16732) நாளை மதியம் 1.30 மணியளவில் நெல்லையிலிருந்து புறப்பட்டு பாலக்காடு சென்றடையும். மறுமார்க்கமாக, நாளை பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16731) திருநெல்வேலி வரையில் மட்டுமே இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story