செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு


செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
x

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 32-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து ஜாமீன் கோரி செந்தில்பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், மற்றும் சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தன.

தொடர்ந்து ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார். அந்த மனு நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், புழல் சிறையிலிருந்து காணொலி மூலம் சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வருகிற 17-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன்மூலம் 32-வது முறையாக அவரது நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவின் மீது மீண்டும் தனது தரப்பு வாதங்களை முன்வைக்க அனுமதி கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்துள்ள வழக்கில் 17-ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.


Next Story