கடைக்காரரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு - வாலிபர் கைது


கடைக்காரரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு - வாலிபர் கைது
x

திருவள்ளூர் அருகே கடைக்காரரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பில் ஈடுப்பட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் அடுத்த ஈக்காடு பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி (வயது 71). இவர் ஈக்காடு வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே ஜெராக்ஸ் கடை மற்றும் கூல்ட்ரிங்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் முனுசாமி கடையில் இருந்தபோது அங்கு வந்த திருவள்ளூர் அடுத்த மெய்யூர் பகுதியை சேர்ந்த கணபதி என்கின்ற சிவா (வயது 19) என்பவர் முனுசாமியிடம் தான் பெரிய ரவுடி எனக் கூறி தனக்கு மது அருந்த பணம் தருமாறு மிரட்டியுள்ளார். அவர் பணம் தர மறுத்ததால் ஆத்திரம் அடைந்த கணபதி, முனுசாமியை தகாத வார்த்தையால் பேசி கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.750-ஐ பறித்துக் கொண்டு தப்பினார். இதுகுறித்து முனுசாமி புல்லரம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து கணபதி என்ற சிவாவை கைது செய்து அவரிடம் இருந்து ரூ.750 பணத்தை பறிமுதல் செய்து அவரை திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.


Next Story