திருப்போரூர் அருகே கல்லூரி மாணவிக்கு செல்போனில் ஆபாச படம் அனுப்பிய காவலாளி கைது


திருப்போரூர் அருகே கல்லூரி மாணவிக்கு செல்போனில் ஆபாச படம் அனுப்பிய காவலாளி கைது
x

திருப்போரூர் அருகே கல்லூரி மாணவிக்கு செல்போனில் ஆபாசபடம் அனுப்பிய காவலாளி கைது செய்யப்பட்டார்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த படூரில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. அங்கேயே மாணவ- மாணவிகள் தங்கி படிக்க விடுதிகளும் உள்ளது. மாணவிகளுக்கான விடுதியில் காவலாளியாக பாலசுப்பிரமணி (வயது 42) இருந்து வந்தார்.

தனியார் அமைப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் விடுதியின் வருகை பதிவேட்டில் இருந்து ஒரு மாணவியின் செல்போன் எண்ணை எடுத்து, அதன் மூலம் அவருக்கு ஆபாச படங்களை அனுப்பியுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து அந்த கல்லூரியின் முதல்வர் போலீசில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் விசாரணை நடத்தி பாலசுப்பிரமணியை கைது செய்தனர்.

பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story