ஹோலி பண்டிகை: சென்னை சென்டிரல் - நாகர்கோவில் இடையே அதிவிரைவு சிறப்பு ரெயில்


ஹோலி பண்டிகை: சென்னை சென்டிரல் - நாகர்கோவில் இடையே அதிவிரைவு சிறப்பு ரெயில்
x

ஹோலி பண்டிகையையொட்டி சென்னை சென்டிரல் - நாகர்கோவில் இடையே அதிவிரைவு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாகர்கோவிலில் இருந்து, வரும் 10, 24 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (வண்டி எண். 06019) மறுநாள் மதியம் 12.10 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடையும்.

மறுமார்க்கமாக, சென்னை சென்டிரலில் இருந்து, வரும் 11, 25 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமை) மதியம் 3.10 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (06020) மறுநாள் காலை 8.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

இதேபோல, நாகர்கோவிலில் இருந்து, வரும் 17, 31 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (06021) மறுநாள் மதியம் 12.10 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடையும்.

மறுமார்க்கமாக, சென்னை சென்டிரலில் இருந்து, வரும் 18 மற்றும் ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமை) மதியம் 3.10 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (06022) மறுநாள் காலை 8.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story