மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி: உடல்நிலை குறித்து அறிய அமைச்சர்கள் வருகை


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி: உடல்நிலை குறித்து அறிய அமைச்சர்கள் வருகை
x

செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து அறிய அமைச்சர்கள் மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர்.

சென்னை,

தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதர் அசோக் வீட்டில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்திலும் சோதனை நடைபெற்றது. மத்திய ரிசர்வ் படை பாதுகாப்புடன் இந்த சோதனை நடைபெற்று வந்தது.

இதனைத்தொடர்ந்து சென்னையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் 17 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த சோதனை நிறைவடைந்தது. சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்தனர்.

இந்த நிலையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜியை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. நெஞ்சுவலியில் அமைச்சர் செந்தில்பாலாஜி கண்ணீர் விட்டு கதறினார். இதனைத்தொடர்ந்து சென்னை ஒமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள ஒமந்தூரர் மருத்துவமனைக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்தார். தொடர்ந்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோரும் மருத்துவமனைக்கு வருகை தந்தனர்.

பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் அமைச்சர்கள் கேட்டறிந்தனர்.

1 More update

Next Story