அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்யக்கோரி அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்


அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்யக்கோரி அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x

அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்யக்கோரி திருவள்ளூரில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

திருவள்ளூர்

தமிழகத்தில் தொடரும் ஊழல் முறைகேடுகள், கள்ளச்சாராயம், கொலை, கொள்ளை, வழிப்பறி, போதைப்பொருட்கள் பழக்கம் உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும், லஞ்ச வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள தி.மு.க. அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்யக்கோரியும் நேற்று காலை திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி அருகே அ.தி.மு.க.வினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் பி.வி.ரமணா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். இதில் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சிறுனியம் பலராமன், மத்திய மாவட்ட செயலாளர் மற்றும் அமைப்பு செயலாளர் பா.பெஞ்சமின்,

கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் வி.மூர்த்தி, தெற்கு மாவட்ட செயலாளர் வி.அலெக்சாண்டர், சிறுபான்மை பிரிவு செயலாளர் எஸ்.அப்துல் ரஹீம், அமைப்பு செயலாளர் திருத்தணி கோ.ஹரி, முன்னாள் எம்.எல்.ஏ மணிமாறன், மாவட்டத் துணைச் செயலாளர் கமாண்டோ பாஸ்கரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, வட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தி.மு.க அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.


Next Story