மெட்ரோ ரெயில் திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட பூங்கா - நேரில் ஆய்வு செய்ய உள்ளதாக ஐகோர்ட்டு நீதிபதி அறிவிப்பு


மெட்ரோ ரெயில் திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட பூங்கா - நேரில் ஆய்வு செய்ய உள்ளதாக ஐகோர்ட்டு நீதிபதி அறிவிப்பு
x

ஷெனாய் நகர் பூங்காவின் சீரமைப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்ய உள்ளதாக ஐகோர்ட்டு நீதிபதி அறிவித்துள்ளார்.

சென்னை,

மெட்ரோ ரெயில் பணிகளுக்காக சென்னை ஷெனாய் நகரில் 8.8 ஏக்கர் பரப்பளவில் உள்ள திரு.வி.க. பூங்கா, கடந்த 2011-ம் ஆண்டு மூடப்பட்டு சீரமைக்கப்பட்டது. இந்நிலையில் பூங்கா சீரமைப்பு தொடர்பான ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், மெட்ரோ பணிக்காக பூங்காவில் இருந்த நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டதாக வழக்கறிஞர் சி.மோகன் அளித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டது.

இந்த நிலையில், வழக்கின் விசாரணைக்காக பூங்காவை நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளதாக நீதிபதி தண்டபாணி தெரிவித்துள்ளார். முன்னதாக பூங்கா சீரமைப்பு பணியில் நடைபாதைகள், ஸ்கேட்டிங் ரிங், பேட்மிண்டன் மைதானம், கூடைப்பந்து மைதானம், கிரிக்கெட் பயிற்சி வலை, வெளிப்புற உடற்பயிற்சிக் கூடம், கூடைப்பந்து விளையாடும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




Next Story