ஐ.நா.விலும் தமிழில் பேசி பெருமை சேர்த்தவர் பிரதமர் மோடி- மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்


ஐ.நா.விலும் தமிழில் பேசி பெருமை சேர்த்தவர் பிரதமர் மோடி- மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்
x

75 ஆண்டுகளில் இந்தியா அதிக முன்னேற்றம் அடைந்துள்ளது.அதில், குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. என்று மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் பேசினார்.

நாகை,

நாகை பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் ரமேஷை ஆதரித்து திருவாரூரில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:

*தமிழ்நாட்டிற்கு வெளியே யாருக்கும் செங்கோல் என்ற வார்த்தை தெரிந்திருக்க வாய்ப்பில்லை

*செங்கோலை நாடாளுமன்றத்தில் வைத்தவர் பிரதமர் மோடி

*இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் தமிழ் கலாச்சாரம் ஊக்குவிக்கப்பட்டுள்ளது.

*ஐநாவிலும் தமிழில் பேசி பெருமை சேர்த்தவர் பிரதமர் மோடி

*பனாரஸ் பல்கலை.யில் தமிழ் ஆய்வு மையம் நிறுவப்பட்டுள்ளது

*75 ஆண்டுகளில் இந்தியா அதிக முன்னேற்றம் அடைந்துள்ளது.அதில், குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

*மிகப் பெரிய பொருளாதார நாடாகவும் இந்தியா மாறியுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story