மழை பாதிப்பு: காஞ்சிபுரத்தில் 2 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை


மழை பாதிப்பு: காஞ்சிபுரத்தில் 2 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
x

மழை வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

சென்னை,

மிக்ஜம் புயல் காரணமாக வட தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் நகரின் பல்வேறு இடங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. மழை வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையில், மரங்கள் மற்றும் மழைநீரை அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதால், சென்னையில் நாளையும் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், மழை வெள்ள பாதிப்பை கருத்தில் கொண்டு காஞ்சிபுரத்தில் 2 தாலுகாக்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காஞ்சிபுரத்தில் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் ஆகிய 2 தாலுகாக்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story