மழையால் பாதித்த 4 மாவட்டங்களில் நாளை பள்ளிகள் இயங்காது - பள்ளிக்கல்வித்துறை


மழையால் பாதித்த 4 மாவட்டங்களில் நாளை பள்ளிகள் இயங்காது - பள்ளிக்கல்வித்துறை
x

சென்னையில் மழை வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

சென்னை,

`மிக்ஜம்' புயல் காரணமாக பெய்த மழையால் சென்னையில் பல பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் நகரின் பல்வேறு இடங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. மழை வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் வரும் 11ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் நாளை பள்ளிகள் இயங்குமா அல்லது இயங்காத என்று மாணவர்களிடையே குழப்பமான சூழ்நிலை நிலவியதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் நாளை எவ்வித பள்ளிகளும் இயங்காது என்றும், வரும் திங்கள்கிழமைதான் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.


Next Story