ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னை எழும்பூர்-நெல்லை இடையே சிறப்பு ரெயில்


ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னை எழும்பூர்-நெல்லை இடையே சிறப்பு ரெயில்
x

ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னை எழும்பூர்-நெல்லை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆயுத பூஜையை முன்னிட்டு ஏற்படும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த சென்னை எழும்பூர்-நெல்லை, நெல்லை-தாம்பரம் மற்றும் சென்னை சென்டிரல்-மங்களூர் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

அதன்படி, இன்று (20-ந்தேதி) இரவு 10.40 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து சிறப்பு ரெயில் (வண்டி எண்.06043) புறப்பட்டு நாளை (21-ந்தேதி) காலை 9.45 மணிக்கு நெல்லை சென்றடையும். மறுமார்க்கமாக வரும் 24-ந்தேதி நெல்லையிலிருந்து மாலை 5.35 மணிக்கு சிறப்பு ரெயில் (06044) புறப்பட்டு அடுத்தநாள் காலை 4.20 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.

இதேபோல, சென்னை சென்டிரலில் இருந்து மங்களூருக்கு இன்று இரவு 11.45 மணிக்கு சிறப்பு ரெயில் (06047) புறப்பட்டு நாளை மாலை 4 மணிக்கு மங்களூர் சென்றடையும். மறுமார்க்கமாக மங்களூரில் இருந்து நாளை இரவு 7.30 மணிக்கு சிறப்பு ரெயில் (06048) புறப்பட்டு அடுத்தநாள் காலை 11.20 மணிக்கு சென்டிரல் ரெயில் நிலையம் வந்தடையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story