எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக தமிழகத்தை சேர்ந்த 14 மீனவர்கள் கைது - இலங்கை கடற்படை நடவடிக்கை


எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக தமிழகத்தை சேர்ந்த 14 மீனவர்கள் கைது - இலங்கை கடற்படை நடவடிக்கை
x
தினத்தந்தி 29 Oct 2023 1:37 AM GMT (Updated: 29 Oct 2023 4:20 AM GMT)

எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக தமிழகத்தை சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.

ராமநாதபுரம்,

எல்லைத்தாண்டி சென்று மீன்பிடித்ததாக தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படை இன்று கைது செய்தது. நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும், மீனவர்களின் 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து சென்ற இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story