பஸ்சில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது


பஸ்சில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது
x

கும்மிடிப்பூண்டி அருகே பஸ்சில் கஞ்சா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் நேற்று கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த தனியார் பஸ்சில் சோதனை செய்தபோது 1½ கிலோ கஞ்சா சிக்கியது.

இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ்சில் கஞ்சா கடத்த முயன்ற புதுச்சேரியை சேர்ந்த லோகேஷ் (வயது 20) என்பவரை கைது செய்தனர்.


Next Story