4 கடைகளுக்கு தீ வைத்தவர் கைது


4 கடைகளுக்கு தீ வைத்தவர் கைது
x
சென்னை

பட்டாபிராம்,

ஆவடியை அடுத்த பட்டாபிராம் தண்டுரை பகுதியில் பூ மாலை கட்டும் கடை, காய்கறி கடை, டிபன் கடை உள்ளிட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த இடத்தில் பூ கட்டுவதற்காக பட்டாபிராம் சித்தேரி கரையை சேர்ந்த ஞானவேல் (வயது 55) என்பவர் இடம் கேட்டார். ஆனால் அந்த கடைக்காரர்கள் அவருக்கு இடம் தரவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து திருநின்றவூர் பகுதியில் பூமாலை கட்டும் கடையில் அவர் வேலை செய்து வருகிறார்.

தனக்கு வியாபாரம் செய்வதற்கு இடம் தரவில்லை என்ற ஆத்திரத்தில் இருந்த ஞானவேல், தண்டுரை பகுதியில் உள்ள பூ மாலை கட்டும் ரஞ்சிதம் என்பவரது கடைக்கு தீ வைத்தார். தீ மளமளவென அருகில் உள்ள காய்கறி, மளிகை மற்றும் டிபன் கடைக்கும் பரவியது. இதில் 4 கடைகளும் எரிந்து சாம்பலானது. இதுபற்றி பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஞானவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story