பிரபல தனியார் கம்பெனியில் வேலை; வாலிபரிடம் ஆசை காட்டி மோசடி செய்த பெண்ணுக்கு வலைவீச்சு


பிரபல தனியார் கம்பெனியில் வேலை; வாலிபரிடம் ஆசை காட்டி மோசடி செய்த பெண்ணுக்கு வலைவீச்சு
x

வேதாரண்யம் அருகே வாலிபரிடம் வேலை வாங்கித் தருவதாக ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்தை மோசடி செய்த பெண்ணை சைபர் கிரைம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நாகப்பட்டினம்

நாகை மாவட்டம் வேதாரண்யம் தோப்புத்துறையை சேர்ந்தவர் சிக்கந்தர்ஷாஜா (வயது 24). இவரது செல்போன் எண்ணிற்கு கடந்த 2-ந்தேதி வந்த அழைப்பில் எதிர்முனையில் அங்கிதா சர்மா என்ற பெண் பேசியுள்ளார். அதில் அந்த பெண், பிரபல தனியார் கம்பெனியில் வேலை வாங்கி தருவதாக கூறினார்.

இதை நம்பி சிக்கந்தர்ஷாஜா 7 தவணைகளில் அவர் கூறிய வங்கி கணக்கில் ரூ. 1 லட்சத்து 81 ஆயிரத்து 50 அனுப்பியுள்ளார். இதையடுத்து அந்த பெண் கம்பெனியில் பணியில் சேருவதற்காக நியமன ஆணையை செல்போன் வாயிலாக அனுப்பி உள்ளார்.

இதை எடுத்து கொண்டு சென்று சென்னையில் உள்ள சம்பந்தப்பட்ட தனியார் கம்பெனிக்கு சென்று கேட்டபோது, அந்த நியமன ஆணை போலியானது என்பது தெரியவந்தது.

இதில் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சிக்கந்தர்ஷாஜா நாகை மாவட்ட சைபர்க்ரைம் போலீசில் நேற்று புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story