வேலூர், ராணிப்பேட்டையில் தொடக்கப்பள்ளிகளுக்கு இன்று விடுமுறை


வேலூர், ராணிப்பேட்டையில் தொடக்கப்பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
x
தினத்தந்தி 26 Sep 2023 1:16 AM GMT (Updated: 26 Sep 2023 1:16 AM GMT)

வேலூர், ராணிப்பேட்டையில் உள்ள தொடக்கப்பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வேலூர்,

வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.

இந்த நிலையில், வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் 1-5 ஆம் வகுப்பு வரை உள்ள தொடக்கப்பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அறிவித்துள்ளார். அதேவேளையில் 6-ம் வகுப்பில் இருந்து பள்ளிகள் வழக்கும்போல் இயங்கும் என்றும், கல்லூரிகளும் வழக்கம்போல் இயங்கும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

அதைபோல தொடர் மழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்திலும் 1-5 ஆம் வகுப்பு வரை இன்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


Next Story