மது வாங்கி கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில் விபரீதம்: இளம்பெண் கொன்று புதைக்கப்பட்ட வழக்கில் கணவர் கைது


மது வாங்கி கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில் விபரீதம்: இளம்பெண் கொன்று புதைக்கப்பட்ட வழக்கில் கணவர் கைது
x

மது வாங்கி கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில் இளம்பெண்ணை அடித்து கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர்

ஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்த புட்டிரெட்டிகண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் தர்மய்யா (வயது 25). இவரது மனைவி லட்சுமி (22). இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளான். இவர்கள் கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு அருகே கரடிபுத்தூர் கிராமத்தில் உள்ள தனியார் மாந்தோப்பில் குடும்பத்தோடு தங்கி வேலை செய்து வந்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆந்திராவில் உள்ள புட்டிரெட்டிகண்டிகை கிராமத்தில் உள்ள சகோதரி வீட்டுக்கு தர்மய்யா தனது குழந்தையோடு சென்றார். அப்போது மனைவி லட்சுமி குறித்து தர்மய்யாவிடம் அவரது சகோதரி கேட்டபோது கடந்த 23-ந் தேதி கோபத்தில் மனைவியை அடித்து கொன்று வேலை செய்து வந்த மாந்தோப்பிலேயே புதைத்து விட்டதாக தெரிவித்தார்.

இந்த தகவலை கரடிபுத்தூரில் உள்ள மற்றொரு மாந்தோப்பு காவலாளியான சுதா என்பவரிடம் தர்மய்யாவின் சகோதரி தெரிவித்தார். இதனையடுத்து சுதா அளித்த தகவலின் பேரில், கடந்த 27-ந் தேதி பாதிரிவேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கும்மிடிப்பூண்டி தாசில்தார் பிரீத்தி முன்னிலையில் லட்சுமியின் உடலை மாந்தோப்பில் இருந்து தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தர்மய்யாவை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

தனிப்படை போலீசார் நேற்று ஆந்திராவில் தர்மய்யாவை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கணவன்-மனைவி இருவருக்கும் குடி பழக்கம் இருந்ததாகவும், கடந்த 22-ந் தேதி மனைவி லட்சுமிக்கு மது வாங்கி கொடுக்காததால் அவர் கோபத்தில் மறுநாள் சமைக்காமல் இருந்ததால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. தகராறில் ஆத்திரமடைந்த தர்மய்யா மண்வெட்டியால் மனைவி லட்சுமியை தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து மனைவியை குழி தோண்டி புதைத்ததாக தர்மய்யா தெரிவித்தார். போலீசார் அவரை பொன்னேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைந்தனர்.


Next Story