தமிழ்நாட்டு மக்களுக்காக மத்திய அரசு செய்தது என்ன? - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி


தமிழ்நாட்டு மக்களுக்காக மத்திய அரசு செய்தது என்ன? - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 5 Jan 2024 10:53 AM GMT (Updated: 5 Jan 2024 10:56 AM GMT)

இடர்மிகு சூழலிலும் இல்லந்தோறும் இன்பம் பொங்கிட தமிழக அரசு துணை நிற்கிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளத்தில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசின் பேட்டியை பகிர்ந்து வெளியிட்டுள்ள பதிவில், தெரிவித்து இருப்பதாவது:-

" பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கமும் வழங்கி இந்த இடர்மிகு சூழலிலும் இல்லந்தோறும் இன்பம் பொங்கிடத் துணை நிற்கிறது நமது திராவிட மாடல் அரசு. ஆட்சி அமைந்தது முதல், மகளிருக்கான விடியல் பயணத் திட்டத்தின் மூலம் மாதம் 1,000 ரூபாய் அளவுக்கு செலவில் மிச்சம், காலை உணவுத் திட்டம் மூலம் பணிச்சுமைக் குறைப்பு, புதுமைப் பெண் திட்டத்தின் மூலமாக மாதம் 1,000 ரூபாய், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மாதம் 1,000 ரூபாய் எனப் பல்வேறு திட்டங்களைத் தமிழ்நாடு அரசின் நிதியினைக் கொண்டு தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது திராவிடமாடல் அரசு.

இந்திய மாநிலங்களின் நலன் காக்க வேண்டிய பொறுப்பில் உள்ள மத்திய அரசு தமிழ்நாட்டு மக்களுக்காகச் செய்தது என்ன? மத்திய நிதியமைச்சரின் பேச்சுக்கு விரிவான பதில் தந்திருக்கிறார் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு" என்று தெரிவித்து உள்ளார்.


Next Story