வேன் மீது பஸ் மோதி கோர விபத்து - 5 பேர் பலி

வேன் மீது பஸ் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
லாகூர்,
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மகாணம் லாகூரில் உள்ள நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை பஸ் சென்றுகொண்டிருந்தது.
பஸ் வேகமாக சென்றுகொண்டிருந்தபோது டிரைவர் உறங்கியுள்ளார். இதனால், சாலையில் முன்னே சென்றுகொண்டிருந்த வேன் மீது அதிவேகமாக மோதியது.
இந்த கோர விபத்தில் வேனில் பயணம் செய்த 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 6 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





