நேபாளத்தில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவு..!
நேபாளத்தில் பிற்பகல் 2.51 மணிக்கு ரிக்டர் 6.2 அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
காத்மாண்டு,
நேபாளத்தில் இன்று பிற்பகல் 2.25 மணிக்கு ரிக்டர் 4.6 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மீண்டும் 2.51 மணிக்கு ரிக்டர் 6.2 அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் மையம் தரைப்பகுதியில் இருந்து சுமார் 5 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பாக தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் வலிமையான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story