கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் ஆஸ்திரேலிய நகரம் - அவசர நிலை பிரகடனம்


கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் ஆஸ்திரேலிய நகரம் - அவசர நிலை பிரகடனம்
x

கனமழை காரணமாக பிட்ஸ்ராய் ஆற்றில் வரலாறு காணாத அளவிற்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

சிட்னி,

மேற்கு ஆஸ்திரேலியாவின் கிம்பர்லி பகுதியில் கடந்த புதன்கிழமை கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அந்நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகள், சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நிலையில், அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.

அங்குள்ள பிட்ஸ்ராய் ஆற்றில் வரலாறு காணாத அளவிற்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த ஆற்றின் கரையோர மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்புப்படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.


Next Story