கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்: ரூ.5 லட்சம் செலவில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரம்


கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்: ரூ.5 லட்சம் செலவில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரம்
x

உலகப் புகழ்பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது.

கன்னியாகுமரி:

உலகப் புகழ்பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பரசுராமரால் பிரதிஷ்டைசெய்யப்பட்ட கோவில் ஆகும். இந்த கோவிலில் உள்ள மூலஸ்தான கருவறையில் பகவதி அம்மன் சன்னதி அமைந்து உள்ளது.

இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். இந்தக் கோவில் பக்தர்களின் தரிசனத்திற்காக தினமும் அதிகாலை 4-30 மணிக்கு திறக்கப்பட்டு பகல் 12-30 மணிக்கு அடைக்கப்படுவது வழக்கம். அதேபோல மாலை 4 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு இரவு 8-30 மணிக்கு நடை அடைக்கப்படுவது வழக்கம்.

இந்த கோவிலில் பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக கோவில் உள்பிரகாரம் மற்றும் வெளிப்பிரகாரங்களில் ரூ.5 லட்சம் செலவில் 33 அதிநவீன சுழலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம் பணி நடந்து வருகிறது. ஏற்கனவே இருந்த 18 பழுதடைந்த கண்காணிப்பு கேமராக்கள் மாற்றப்பட்டு அதற்கு பதிலாக புதிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம் பணியும் நடந்து வருகிறது.


Next Story