சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்


சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
x

image courtesy: twitter/@IPL

தினத்தந்தி 21 March 2024 10:25 AM GMT (Updated: 21 March 2024 1:08 PM GMT)

தோனி அணியில் முக்கிய வீரராக செயல்பட உள்ளார்.

சென்னை,

இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல்.-ன் 17-வது சீசன் நாளை தொடங்க உள்ளது. இதன் முதலாவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங் அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று நடைபெற்ற கோப்பை அறிமுக விழாவில் சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் பங்கேற்ற நிலையில், தோனி பதவியிலிருந்து விலகியது தெரியவந்துள்ளது. தோனி அணியில் முக்கிய வீரராக செயல்பட உள்ளார்.

தோனி தலைமையில்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 முறை கோப்பையை கைப்பற்றி இருந்தது. முன்னதாக தோனி தன்னுடைய பேஸ்புக் பதிவில் "புதிய சீசனில் புதிய வேலைக்காக (ரோல்) காத்திருக்க முடியவில்லை. காத்திருங்கள்" என்று பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story