விஜய் ஹசாரே டிராபி: தமிழ்நாட்டுக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை பேட்டிங் தேர்வு...!


விஜய் ஹசாரே டிராபி: தமிழ்நாட்டுக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை பேட்டிங் தேர்வு...!
x

Image Courtesy: Twitter

விஜய் ஹசாரே டிராபி தொடரின் காலிறுதி ஆட்டத்தில் தமிழக அணி மும்பையை எதிர்கொள்கிறது.

ராஜ்கோட்,

விஜய் ஹசாரே டிராபிக்கான கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் மற்றும் முதன்மை காலிறுதி ஆட்டங்களின் முடிவில் அரியானா, பெங்கால், ராஜஸ்தான், கேரளா, விதர்பா, கர்நாடகா, மும்பை, தமிழ்நாடு ஆகிய 8 அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேறின.

இந்த தொடரின் காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற உள்ளன. இதில் 4வது காலிறுதி ஆட்டத்தில் தமிழக அணி மும்பையை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் ராஜ்கோட்டில் உள்ள சனோசரா கிரிக்கெட் மைதானம் பி-ல் நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.

மற்ற காலிறுதி ஆட்டங்களில் அரியானா - பெங்கால், ராஜஸ்தான் - கேரளா, விதர்பா - கர்நாடகா அணிகள் மோத உள்ளன. காலிறுதி ஆட்டங்களில் வெற்றி பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.


Next Story