மகளிர் கிரிக்கெட்: இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!


மகளிர் கிரிக்கெட்: இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
x

image courtesy; twitter/ @BCCIWomen

இந்த அணிக்கு ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாகவும், ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மும்பை,

இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் போட்டிகள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதலாவது 20 ஓவர் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நாளை நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த அணிக்கு ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாகவும், ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய பெண்கள் 20 ஓவர் போட்டி அணி வருமாறு:- ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷபாலி வர்மா, தீப்தி ஷர்மா, யாஸ்திகா பாட்டியா, ரிச்சா கோஷ், அமன்ஜோத் கவுர், ஸ்ரேயங்கா பட்டீல், மன்னட் காஷ்யப், சாய்கா இஷாக், ரேணுகா சிங் தாக்குர், திதாஸ் சாது, பூஜா வஸ்ட்ராகர், கனிகா அகுஜா, மின்னு


Next Story