கடவுளால் செய்ய முடியாத செயல்களா... மோடியை விமர்சித்த மம்தா பானர்ஜி

தேர்தலில் தோற்றுவிடுவோமோ என்கிற பயத்தில் அர்த்தமின்றி பா.ஜ.க. தலைவர்கள் பேசி கொண்டிருக்கிறார்கள் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-25 07:42 GMT

கொல்கத்தா,

தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தை சேர்ந்த மதுராப்பூர் பகுதியில் மக்களவை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியதாவது, "தேர்தலில் எங்கே தோற்றுவிடுவோமோ என்கிற பயத்தில் அர்த்தமின்றி வாய்க்கு வந்ததையெல்லாம் பா.ஜ.க. தலைவர்கள் பேசி கொண்டிருக்கிறார்கள். இதில் ஒருவர் தன்னை கடவுளின் குழந்தை என்கிறார்.

நான் கேட்கிறேன், கலவரத்தை தூண்டிவிடவும், விளம்பரங்களின் வழியாக பொய்களை பரப்பவும், என்.ஆர்.சி.யை நடைமுறைப்படுத்துகிறேன் என்கிற பெயரில் மக்களை சிறையில் அடைக்கவுமா கடவுள் ஒருவரை அனுப்பி வைப்பார்? நூறுநாள் வேலை திட்டத்தின் நிதியை நிறுத்தவா, கிராமப்புற வீடுகள் கட்டப்படுவதை தடுக்கவா தனது தூதரை இறைவன் அனுப்பி வைப்பார்? மக்களின் வங்கிக்கணக்கில் 15 லட்சம் ரூபாய் செலுத்துவேன் என்கிற உத்தரவாதத்திலிருந்து இறைவன் பின்வாங்குவாரா என்ன? கடவுளால் இத்தகைய செயல்களை செய்ய முடியாது. பூரியில் உள்ள ஜெகநாதரே பிரதமர் மோடியில் பக்தர் என்று பா.ஜ.க. வேட்பாளர் ஒருவர் பேசியுள்ளார். அடுத்ததாக, பிரதமர் மோடிக்கு அவரின் பக்தர்கள் கோவில் கட்டி பூஜை செய்வார்கள் என்று தோன்றுகிறது."இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்