தி.மு.க.வை சேர்ந்த சிம்லா முத்துச்சோழன் அ.தி.மு.க.வில் இணைந்தார்

ஆர்.கே நகர் தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் சிம்லா முத்துச்சோழன் என்பது குறிப்பிடத்தக்கது.

Update: 2024-03-07 06:50 GMT

சென்னை,

தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சற்குணபாண்டியனின் மருமகள் சிம்லா முத்துச்சோழன் தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்துள்ளார். பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் சிம்லா முத்துச்சோழன் அ.தி.மு.க.வில் இணைந்தார்.

கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் முக்கிய அமைச்சராக இருந்தவர் சற்குணபாண்டியன். தி.மு.க. துணைப் பொதுச்செயலாளராகவும் இருந்த அவர் சென்னை ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதியில் பலமுறை நின்று வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த 2016-ம் ஆண்டு ஆர்.கே.நகர் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு எதிராக, தி.மு.க. களமிறக்கிய வேட்பாளர்தான் சிம்லா முத்துச்சோழன். கடுமையான போட்டியின் முடிவில் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா வெற்றி பெற்றார். ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டதால் சிம்லா முத்துச்சோழன் தமிழகம் முழுவதும் பிரபலமானார்.

Tags:    

மேலும் செய்திகள்