திண்டுக்கல்: கஞ்சா விற்ற வழக்கில் 9 பேருக்கு சிறை, ரூ.1 லட்சம் அபராதம்
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பகுதியில் கடந்த 2022-ம் ஆண்டு 36.400 கிலோ கிராம் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.;
திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு, இ.பி. காலனி பகுதியில் கடந்த 2022-ம் ஆண்டு 36.400 கிலோ கிராம் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த வழக்கில் கன்னிவாடி தெத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த வைரவன் (வயது31), திண்டுக்கல் அங்காளஈஸ்வரி கோவில் தெருவை சேர்ந்த முத்துக்கருப்பன்(23), சென்னை முகப்பேரு பகுதியைச் சேர்ந்த சுந்தரபாண்டி(38), கன்னிவாடி தெத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த நவீனா(25), தேனி ஆண்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த அர்ஜுனன்(48), திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த ஷேக்பரீத்(33), தேனி அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்த திவ்யா(31), வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த ஷேக் முகமதுரஃபிக்(35), ஆந்திரா விசாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ஜலாபாக லோகேஸ்வரா பிரசாத்(30) ஆகிய 9 பேரை தாடிக்கொம்பு காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு மதுரை முதலாம் கூடுதல் சிறப்பு போதை பொருட்கள் மனமயக்கும் பொருட்கள் மற்றும் தடுப்பு வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. பிரதீப் அறிவுறுத்தலின்படி, திண்டுக்கல் தாலுகா சரக போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், நீதிமன்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கமலதாஸ், ஏட்டு சதீஷ்குமார் மற்றும் அரசு வழக்கறிஞர் விஜயபாண்டியன் ஆகியோரின் முயற்சியால் நேற்று (19.5.2025) மதுரை போதைப் பொருட்கள் மனமயக்கம் பொருட்கள் மற்றும் தடுப்பு வழக்குகள் நீதிமன்ற நீதிபதி, மேற்கண்ட குற்றவாளிகள் வைரவன், முத்துக்கருப்பன், சுந்தரபாண்டி, நவீனா, அர்ஜுனன், ஜலாபாக லோகேஸ்வரா பிரசாத் ஆகிய 6 பேருக்கும் தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்ததோடு, சேக்பரீத், திவ்யா, சேக் முகமதுரஃபிக் ஆகிய 3 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.