பெரும்பிடுகு முத்தரையர் வீரத்தை போற்றி வணங்குகிறேன்- எடப்பாடி பழனிசாமி

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1350வது சதய விழாவில் அவர்தம் பெரும் புகழையும் வீரத்தையும் போற்றி வணங்குகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.;

Update:2025-05-23 11:55 IST

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

தமிழக வரலாற்றில் பொற்கால ஆட்சியை வழங்கிய தலைசிறந்த மன்னர்களில் முதன்மையானவராக, முத்தமிழுக்கு மெய்கீர்த்தி கண்ட போற்றுதலுக்குரிய தமிழ்வேந்தராக, போர்க்களத்தில் எதிரிகளால் வீழ்த்தவே முடியாத வாகைப்பூ சூடிய மாவீரராக திகழ்ந்த பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1350வது சதய விழாவில் அவர்தம் பெரும் புகழையும் வீரத்தையும் போற்றி வணங்குகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்