
மராட்டியத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் மத்திய மந்திரி பியூஸ் கோயல் தனது மனைவி மற்றும் மகனுடன் வந்து வாக்களித்தார்.
வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, மக்கள் அதிக அளவில் வாக்களித்து வருகின்றனர். தேர்தல் ஆணையம் நல்ல ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்த தேர்தலில் 60 சதவீதம் வாக்குப்பதிவு இருக்கும் என்று நான் நம்புகிறேன். வடக்கு மும்பையில் உள்ள 6 இடங்களிலும் மகாயுதி கூட்டணி வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





