113 வயதிலும் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்த மூதாட்டி


113 வயதிலும் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்த மூதாட்டி
x
Daily Thanthi 2024-11-20 10:17:36.0
t-max-icont-min-icon

மராட்டியத்தில் இன்று காலை சட்டசபை தேர்தல் தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில் மக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். அந்த வகையில், மும்பையை சேர்ந்த 113 வயதான காஞ்சன்பென் பாட்ஷா என்ற மூதாட்டி தனது வாக்குரிமையைப் பயன்படுத்தி ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளார்.

மும்பையில் வசித்துவரும் காஞ்சன்பென் ஒவ்வொரு மாநில சட்டசபை மற்றும் மக்களவைத் தேர்தலிலும் வாக்களித்து வருகிறார். இந்த செயலை தவறாமலும், அர்ப்பணிப்புடனும் செய்து வருவதாக வாக்குச்சாவடிக்கு மூதாட்டியுடன் வந்திருந்த குடும்ப உறுப்பினர் கூறியுள்ளார்.

1 More update

Next Story