சிந்து நதி ஒப்பந்தத்தை ஏற்க முடியாது - பிரதமர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-08-2025
x
Daily Thanthi 2025-08-15 03:29:57.0
t-max-icont-min-icon

"சிந்து நதி ஒப்பந்தத்தை ஏற்க முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்

79-வது சுதந்திர தினவிழாவில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் கூறியதாவது:-

சிந்து நதி நீரை முழுமையாக பயன்படுத்தும் உரிமை இந்திய விவசாயிகளுக்கு மட்டுமே உள்ளது. தண்ணீரும், ரத்தமும் ஒன்றாக ஓடும் வகையிலான ஒப்பந்தத்தை ஏற்க முடியாது. எதிரி நாட்டு விவசாய நிலங்களுக்கு நமது தண்ணீர் கிடைக்க கூடாது. அதனால் ஒப்பந்தத்தை ரத்து செய்தோம்.

இந்த சுதந்திர தினத்தில் நாட்டின் 140 கோடி மக்களுக்கும் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். லட்சக்கணக்கான வீரர்களின் தியாகங்களால் நம் தேசம் விடுதலை பெற்றது

நாட்டின் விடுதலையில் ஏராளமான தேசத் தலைவர்கள் தங்கள் பங்களிப்பை வழங்கியுள்ளனர். இன்று நமது அரசியல் சாசனத்திற்கு தலை வணங்கி மரியாதை செலுத்துகிறேன். ஒரே நாடு ஒரே சாசனம் என்பது நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவை நேசிப்பவர்கள், இந்தியாவின் நண்பர்களுக்கு என் இதயத்தில் இருந்து வணக்கத்தை தெரிவிக்கிறேன். அணுஆயுத மிரட்டல்களை ஒரு போதும் பொருட்படுத்தமாட்டோம். சிந்து நதி இந்தியர்களுக்கு மட்டும் தான் சொந்தமானது.

இவ்வாறு அவர் கூறினார். 

1 More update

Next Story