
எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: மாநிலங்களவையைத் தொடர்ந்து மக்களவையும் நாள் முழுவதும் ஒத்தி வைப்பு
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதானி மீதான குற்றச்சாட்டு தொடர்பாக விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் முழுக்கமிட்டன. மேலும் உத்தரபிரதேசம் மற்றும் மணிப்பூரில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக விவாதிக்கவும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
எதிர்க்கட்சிகள் தொடர் அமளி காரணமாக, மாநிலங்களவையைத் தொடர்ந்து மக்களவையும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
இதனிடையே நாளை அரசியல் சாசன தினம் கொண்டாடப்படுவதால் இரு அவைகளின் வழக்கமான அமர்வுகள் நடைபெறாது.
இதன்படி புதன்கிழமை காலை 11 மணிக்கு நாடாளுமன்ற இரு அவைகளும் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





