
நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்நிலையில், கூட்டத்தொடரின் 2வது நாளான இன்று இரு அவைகளும் காலை 11 மணிக்கு தொடங்கின.
அவை நடவடிக்கை தொடங்கியதும், பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
காலை 11 மணிக்கு இரு அவைகளும் (மக்களவை, மாநிலங்களவை) தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவைகள் 12 மணிவரை ஒத்திவைக்கப்படது. இதையடுத்து 12 மணிக்கு அவைகள் தொடங்கியதும் மீண்டும் அமளியால் மதியம் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், மதியம் 2 மணிக்கு மக்களவை, மாநிலங்களவை கூடின. அப்போதும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், இரு அவைகளும் இன்று நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன.
Related Tags :
Next Story






