
தமிழ்நாட்டில் நாளை மறுநாள் ரெட் அலர்ட் - இந்திய வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் வரும் 30ம் தேதி ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதால் (21 செ.மீ) ரெட் அலர்ட் விடுக்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் இன்று மாலை முதல் நாளை காலை வரை தென்மேற்கு வங்கக்கடலில் மணிக்கு 85 கி.மீ. காற்றின் வேகம் கொண்ட ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒரு சூறாவளி புயலாக மாற வாய்ப்பு உள்ளது என்றும் கூறி இருக்கிறது.
இந்த புயலானது பின்னர் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வரும் 30-ம் தேதி காலை காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே வட தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





